Sunday, November 12, 2017

எழுதழல் - அச்சம்



மாணவர்கள் பலர் எனக்குவிடாய் கொண்டு முலைக்கண் தேடி வந்த குழவி உன் தந்தைநீயோ குருதி மணம் பெற்று நான் தேடி வந்த இரைஉன்னை நான்கவ்விச் செல்கிறேன்என்னிடமிருந்து நீ தப்ப இயலாது” - இவ்வரிகளில் உள்ளது அர்ஜுனனுக்கும்அபிமன்யுவிற்குமான வேறுபாடுநம்முடைய மரபில் குருவைசீடர்கள் அணுகி அறியும் விதங்கள் என இரண்டை குறிப்பிடுவர்.

  1. மர்க்கட நியாயம்
  2. மார்ஜர நியாயம்

மர்க்கட நியாயம் என்பதுகுரங்கு வழிதாய்க் குரங்கை இறுகக் கட்டிக் கொள்ளும் குட்டியைப் போல குருவைக் கட்டிக் கொள்வதுஇவ்வழியில் சீடனின் அறிதல்சீடனைப் பொறுத்ததேசீடன் விரும்பினால் இறங்கிக் கொள்ளலாம்தாய் மரம் விட்டு மரம் தாவுகையில் கீழே வீழாதிருக்க வேண்டிய பொறுப்பு குட்டிக்கேஎனவே கீழே விழுந்து விடுவோமோ என்ற அச்சம் எப்போதுமே குட்டிக்கு இருக்கத்தான் செய்யும், இறுகப் பற்றிக் கொள்ளும்.

மார்ஜர நியாயம் என்பது பூனையின் வழிபூனை தன் பைதலைக் கவ்விச் செல்வது போலகுரு சீடனை ஆட்கொள்வது இம்முறைபற்கள் படும்ரத்தம் வராதுராமகிருஷ்ணர் சுவாமி விவேகானந்தரை ஆட்கொண்ட விதம் இதற்கு மிகச் சிறந்த சான்றுஇவ்வழியில் குரு நினைத்தால் மட்டுமே சீடனுக்கு விடுதலைதாய்பூனை வாயில் அமைந்த குட்டிக்கு வீழ்தலைப் பற்றிய அச்சம் இருப்பதில்லைஅச்சமேயின்றி அது தாய் செல்லும் இடமெல்லாம் செல்லும்.

அர்ஜுனனையும்அபிமன்யுவையும் வேறுபடுத்தும் அம்சம் இந்த அச்சம் தான்அர்ஜுனனுக்கு இத்தனை அறிதலுக்குப் பிறகும் அச்சம் என்பது எஞ்சத் தான்செய்கிறதுஅது தன் காண்டீபத்தைப் பற்றிய அச்சம்அதன் இலக்குக்கு முன் உடன்பிறந்தான்எதிரி என்ற வேறுபாடு கிடையாது என்ற அச்சம்அதைவிளையாட்டு வில்லாகவே வைத்திருக்க அவன் விரும்புகிறான்அபிமன்யுவுக்கு அந்த அச்சம் பிறந்த காலம் தொட்டே இல்லைவிளையாட்டு வில்லைக்கொண்டே தான் உன்னிய ஒன்றிற்காக உடன்பிறந்தானையும் கொல்ல அவனுக்கு தயக்கம் இல்லை.ஒரு வகையில் அது இயல்பு தானேஅர்ஜுனன் நேமிநாதரைக் கண்டடைந்து அறிந்த பின்பு பிறந்தவன் அல்லவா அபிமன்யுஅச்சத்தை வென்று சென்றவர் அல்லவா அவர்அவரை அறிந்ததால் தானே சுஜயன் தன்அச்சங்களை விட்டான். (காண்டீபம்அன்று துவங்கி இன்று வரைக்கும் அர்ஜுனனுக்கு அபிமன்யுவின் மீதான அச்சம் இருந்து கொண்டே தான் இருக்கிறது.

மாறாக அபிமன்யுவிற்கு எந்த அச்சமும் இல்லைஎனவே அவன் எப்போதும் எதிலும் தயக்கமின்றி நுழைந்து கொண்டே இருக்கிறான்அவன் தயங்கிய ஒரே இடம்உத்தரைஅவளை அவனால் தயக்கமின்றி அணுகவே இயலவில்லைஅதில் இருந்தும் அவனை விடுவித்தவர் அவன் மாதுலரேதிரௌபதிக்கு படைக்கப்பட்டஐவரைப் போலவேவிராடருக்குக் கொடுக்கப்பட்ட படையல் அவன் என்ற கூற்று அவனை சற்றேனும் விடுவித்ததுஇருப்பினும் அவன் முழுமையாகநிறையவில்லைஅவனுக்குத் தேவையானது பிரேமையின் பித்துஅதை அறிந்தால் மட்டுமே அவனால் தன்னையும் உத்தரையையும் புரிந்து கொள்ள இயலும்அதற்காகவே அவர் அவனை துவாரகைக்கு வரச் சொல்கிறார்அதையே உத்தரையும் அவர்களது இறுதிச் சந்திப்பில் கூறுகிறாள்கிருஷ்ணரைச் சந்தித்து விட்டுதுவாரகை செல்வதற்காக விடைபெற வந்தவனிடம் உத்தரை ஒரு அன்னையாகவே வாழ்த்துரைக்கிறாள்மிக நுட்பமாக வெண்முரசு இவ்விடத்தைக் கையாண்டுஇருக்கிறதுஅவள் அவனுக்கு பிரேமையின் பித்து நிலை கூடட்டும் என்றே “அன்னையும் ஆகி நின்று இத்தருணத்தில் அறிந்து எழுக” என வாழ்த்துகிறாள்.

அவனுடைய இறுதி அறிதல் துவாரகையின் கண்ணனின் வேணுகானம் நிறைத்தஅதன் அழைப்பில் வந்த மகளிரும்குழந்தைகளும் அதில் மயங்கி அமர்ந்த  அவையில் நிகழ்ந்ததுஅந்த அவையில் தான் அவன் உத்தரையின் கூற்றையும், “மைந்தாபெண்ணென்றாகாது எவருக்கும் பிரேமை அமைவதில்லைபித்துகொளாது இங்கு எவரும் பேரறிவை சென்று தொடுவதுமில்லை” என்ற கிருஷ்ணரின் கூற்றையும் முழுதறிகிறான்அவனது இறுதி அச்சத்தையும்தயக்கத்தையும்தளையையும் கடக்கிறான்ஆம்அத்தருணத்தில் அவன் தன்னைச் சுற்றியிருந்த இளைய அர்ஜுனன் என்ற தளையை உடைத்தெறிகிறான்

அன்புடன், அருணாச்சலம் மகராஜன்