Wednesday, November 22, 2017

கருமை



அன்புள்ள ஜெ,


//வாழ்த்தொலிகள் சூழ தெருக்களினூடாக ஓடி அரண்மனைக் கோட்டையைக் கடந்து புஷ்பகோட்டத்தின் வாயிலில் தேர் சென்று நின்றது. அவ்வோசை கேட்டு விழித்துக்கொண்ட பலராமர் “எங்கு வந்திருக்கிறோம், இளையவனே?” என்றார். “என் அவைக்கு, ஆசிரியரே” என்றான் துரியோதனன். “நீயா?” என வாயை துடைத்துக்கொண்ட அவர் “ஆம், நீ…. இது அஸ்தினபுரி” என்றார்.//


களைத்துயிலில் கூட தம்பியுடன் இருப்பதையே அவர் அகம் தேர்ந்தெடுக்கிறது. ஆனால் புற உலகில் அரசு சூழ்தல்களால் தம்பியைப் புறந்தள்ளி நிற்க வேண்டிய இக்கட்டில் சிக்கிக்கொண்டு அதன்படி செயல்படுகிறார். அவர் "நீயா?" என்று கேட்டபோது 'மனுஷன் பாவம்யா. ஏண்டா இவர போட்டு இப்புடி படுத்தி எடுக்குறீங்க?' என்று தோன்றியது.

அரசன் .உ