Wednesday, November 15, 2017

சாம்பன்



அன்புள்ள ஜெ

சர்வதன் யௌதேயன் சுருதசோமன் சுருதகீர்த்தி என பெரும்பாலான இளைஞர்களின் கதாபாத்திரம் well defined  ஆக உள்ளது. அபிமன்யூவின் கதாபாத்திரம் வளர்ந்துகொண்டே செல்கிறது. ஆனால் சாம்பனின் கதாபாத்திரம் தொடர்ச்சியாக ஊசலாட்டத்திலேயே இருக்கிறது. ஆணவமும் தாழ்வுணர்ச்சியுமாக அலைமோதுகிறது. ஒரே ஒரு அத்தியாயத்திலேயே அவன் மனநிலை இருமுறை தலைகீழாக மாறுகிறது. ஆகவே அவன் நிலையற்றும் நம்பமுடியாதவனாகவும் இருக்கிறான். அவனுக்கு சர்வதன் மேல் அன்பும் பகையும் மாறிமாறி வருகிறது. இதுவரை வெண்முரசில் பல கதாபாத்திரங்கள் வந்தாலும் சாம்பன் முற்றிலும் வேறுபட்டவனாக இருக்கிறான்


ஜெயராமன்