Tuesday, November 14, 2017

கோபிகைமனநிலை



பெருமதிப்பிற்குரிய ஜெமோ.அவர்களுக்கு,

வணக்கம்.

இன்றைய அத்தியாயத்தில் யௌதேயனுக்கும்,சர்வதனுக்கும் நடக்கும் உரையாடலில் ...: அசுரரும் நிஷாதரும்கூட மணத்தன்னேற்பில் அவைபுகுந்து அமரலாம் என முன்காட்டு(முன்மாதிரி?!) உள்ளது. ஆகவே ஷத்ரியர்கள் உளக்குறை கொள்ள முடியாது” என்று யௌதேயன் சொன்னான்.என்ற   வரி வருகிறது.யாதவர்கள் உளக்குறை கொள்ள முடியாது” என்று வரவேண்டும் எனக் கருதுகிறேன்.மேலும் துரியனின் மகள் லக்ஷ்மணையைப் பற்றி சொல்லும்போது அவள் இளைய யாதவனை நினைவிலிருத்தி வாழும் ஒரு ''கோபமானசை''(கோப மானசை என்று பிரிக்க வேண்டுமா?) என்று குறிப்பிட்டிருக்கிறீர்கள்.இதன் பொருளென்னவென்று விளக்கமுடியுமா? 

அன்புடன்,
அ .சேஷகிரி.

அன்புள்ள சேஷகிரி

அது சரியானதுதான். யாதவர்கள் ஏன் அமர்த்தபட்டார்கள் என ஷத்ரியர் கோபம் கொள்ளமுடியாது என்பது அதன்பொருள்.

கோபகுலப் பெண்களின் மனநிலை

ஜெ