Saturday, December 16, 2017

தேவியர்



ஜெ

எழுதழலின் அழகுகளில் ஒன்று எட்டு அரசியரும் இயல்பாகவே கிருஷ்ணனில் சென்று சேர்ந்துகொண்ட விதம். நான் பன்னிருபடைக்களத்தில் சத்யபாமை கிருஷ்ணனிடம் ஊடுவதும் கிருஷ்னனுடன் உருவாகும் பூசலும் வரும் அத்தியாயத்தை சென்று வாசித்தேன். அதெல்லாமே கடலில் அலைபோல. என்ன அலைஅடித்தாலும் திரும்ப கடலுக்குத்தான் அவை செல்லும். கடல் என்றால் அலையாகவேதான் தெரியும். ஸ்ரீனிவாசனிடமிருந்து தேவியர் பிரிவதே இல்லை


கிரிதர் ராமானுஜம்