Monday, December 4, 2017

நிர்மித்ரன்



ஜெ

வெண்முரசின் மிகச்சோகமான பகுதி நிர்மித்ரன் சாவதற்காக அஞ்சுவதுதான். அவன் சின்னப்பையன். மிகுந்த உத்வேகத்துடன் உலகத்தைப்பார்க்கா ஆரம்பிக்கிறான். சபையில் அவன் திரும்பி அமர்ந்து எட்டி மொத்தச்சபையையும் பார்த்து ஆச்சரியப்பட்டு கேள்விகளாகக் கேட்பதும் அவன் அண்ணன் அவனை அடக்குவதும் கண்களிலேயே நிற்கிறது. ஆனால் விதி அப்படித்தான் நடக்கவிருக்கிறது. ஒன்றும் செய்யமுடியாது என நினைத்து ஒரு பெருமூச்சும் எழுந்தது


அகிலா