Friday, December 8, 2017

இருவகைத் துயில்கள்



அன்புள்ள ஜெ

கிருஷ்ணனின் இருவகைத் துயில்கள் வருகின்றன எழுதழலில். முதல்முறை அவனைத் துயிலெழுப்பவே குந்தி அபிமன்யூவை அனுப்புகிறாள். அது 14 ஆண்டுக்காலத் துயில். அதிலிருப்பவன் இருண்டவன். பின்னர் இரண்டாவதுதுயில். அதில் அர்ஜுனன் வந்து எழுப்புகிறான். அருகே இருப்பவன் துரியோதனன். இந்த இரண்டாம் துயிலில் ஒளியுடன் பாற்கடல்பரந்தாமன் போலிருக்கிறான். முதலில் யோகீஸ்வரன்போல. அந்த இரு துயில்களின் கதை அல்லது இரண்டு விழிப்புகளின் கதைதான் எழுதழல்


சிவக்குமார்