Saturday, December 9, 2017

ராதை



ஜெ

நீலம் நாவலை மீண்டும் வாசித்துக்கொண்டிருக்கிறேன். இன்றுவரை வந்தவற்றில் நீலம் ஓர் உச்சம். மறுபக்கம் சொல்வளர்காடு இன்னொரு உச்சம் என்பது என் எண்ணம். நீலத்தில் பித்து. சொல்வளர்காட்டில் தர்க்கம். எனக்கு நீலம் வழியாக வென்முரசை அணுகுவதே சரி என்ற எண்ணமே உள்ளது. நீலம்தான் பல வரிகளை பொறுமையாக வாசிக்கச்செய்கிறது. ராதையின் பிரேமையை இப்போது அத்தனைபேரும் மெல்லமெல்ல வந்தடைந்திருக்கும்போது இந்தப்போரே ராதையால்தானா என்றுகூட நினைக்கத்தோன்றுகிறது


ஆனந்த்