Tuesday, January 9, 2018

உடல்



அன்புள்ள ஜெ

வெண்முரசின் இன்றைய அத்தியாயம் வாசிக்கும்போது அதில் சொல்லப்படுவது என்ன என்பது சரியாகப்புரியவில்லை. பாண்டு இறக்கும் அத்தியாயத்தில் அவருடைய சடலம் எப்படிக்கிடந்தது என்று வர்ணிக்கப்படும் இடத்தில்தான் அவருடைய உடலில் உள்ள எழுச்சி பதிவாகியிருப்பதைப் பார்த்தேன். அதன்பின் வாசித்தபோது குந்தியின் விசை புரிந்தது. குந்தி திட்டமிட்டு அதைச்செய்யவில்லை. அவளுக்கு பாண்டுவின் மனம் ஆழ்மனமாக புரிந்திருந்தது. பாண்டுவின் ஆசையைத்றியிருக்கிறோம் என்பதை அவளே கனவுகள் வழியாகத்தான் புரிந்துகொண்டதாகச் சொல்கிறாள்


சரவணன்