Tuesday, February 6, 2018

துகிலுரிதல்



அன்புள்ள ஜெ,

துரியோதனன் தன் சபையில் மீண்டும் துகிலுரிந்திருக்கிறான். இம்முறை குந்தியை. அவனுடைய குரூரத்திற்கு மறுமொழி சொல்லமுடியாமல் கைகூப்பி நின்றிருக்கும் கிருஷ்ணனை மனக்கண்ணில் கண்டபோது மனம் வலித்தது. எந்தச்சபையிலும் பெண்களைச் சொல்வதுதான் ஆண்கள் எளிதாக வெற்றிபெறுவதற்கான வழி என நினைக்கிறேன். துரியோதனனின் மனசில் தோன்றிய கலி அந்த வழியைத்தேர்ந்தெடுத்ததில் ஆச்சரியமே இல்லை. அன்றைக்கும் இன்றைக்கும் இரண்டு ஆண்கள் நடுவே அதிகாரப்போர் என்றால் அவர்களின் அன்னையையும் மனைவியையும் பேசுவதுதானே நம் நாட்டிலே நடந்துகொண்டிருக்கிறது. துரியோதனன் கேட்பது மிகத்தந்திரமான கேள்வி. அதற்கு பதில் சொல்கிறேன் என்று குந்தி சபைக்கு வந்தால் சிறுமையைத்தான் சந்திப்பாள்.


எஸ்